/* */

கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக கொண்டு வந்த நபர் கைது

கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக கொண்டு வந்த நபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக கொண்டு வந்த நபர் கைது
X



தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோதனைச் சாவடி வழியாக கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை காவல்துறையினர் தீவிர சோதனைக்கு பிறகே தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கின்றனர்.

கேரளாவில் இருந்து வரும் பயணிகள் தமிழக கேரள எல்லையான கோட்டை வாசல் வரை கேரள மாநில பேருந்தில் வந்து அங்கிருந்து தமிழ்நாட்டிற்குள் ஆட்டோ போன்ற வாகனங்களில் வருவது வழக்கம். இந்நிலையில் காவல்துறையினர் ஆட்டோவில் வந்த நபரை சோதனை செய்ததில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை வைத்திருப்பது தெரியவந்தது.

விற்பனைக்காக கேரள லாட்டரி சீட்டுகளை கொண்டுவந்த தெற்கு கல்லிடைக்குறிச்சி புது காலனியைச் சேர்ந்த அழகேசன் என்ற நபர் மீது புளியரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை காவல்துறையினர்கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 240 லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் ரூபாய் 10,000 பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 24 Aug 2021 2:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  4. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  7. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  8. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  9. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  10. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்