/* */

தமிழக-கேரள காவல்துறையினர் இணைந்து புளியரையில் தீவிர வாகன சோதனை

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள புளியரை பகுதியில் காவல் துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தமிழக-கேரள காவல்துறையினர் இணைந்து புளியரையில் தீவிர வாகன சோதனை
X

புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டை வாசல் பகுதியில் தமிழக-கேரள காவல் துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழக- கேரள காவல் துறையினர் இணைந்து புளியரையில் தீவிர வாகன சோதனை

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தடை செய்யப்பட்ட பொருட்கள் போன்றவை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு செல்வதை தடுக்கும் விதமாக தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டை வாசல் பகுதியில் தமிழக கேரள காவல் துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் கேரள மாநில excise துணைக் காவல் கண்காணிப்பாளர் ராபர்ட் செங்கோட்டை காவல் ஆய்வாளர் ஷியாம் சுந்தர்சார்பு ஆய்வாளர் தமுத்து கணேஷ் மற்றும் தமிழக கேரள காவல்துறையினர் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு, அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனை செய்த பிறகே மாநிலங்களுக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது

Updated On: 23 Dec 2021 12:54 PM GMT

Related News