/* */

நிபா வைரஸ் எதிரொலி: தமிழக - கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

நிபா வைரஸ் எதிரொலியாக தென்காசி மாவட்டம் தமிழக - கேரளா எல்லைப் பகுதியான புளியரை சோதனை சாவடியில் சுகாதாரத்துறை தீவிர சோதனை நடத்தி வருகிறது

HIGHLIGHTS

நிபா வைரஸ் எதிரொலி:  தமிழக - கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
X

நிபா வைரஸ் எதிரொலியாக தமிழக கேரளா எல்லையில் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

கேரளாவில் தற்போது வரை நிபா வைரஸ் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தமிழகத்திலும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இரு மாநில எல்லைகளிலும் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் நிபா வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க கண்காணிப்பைத் தீவிரப்படுத்த கேரளா அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் நிபா வைரஸ் எதிரொலியாக தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தென்காசி மாவட்டதின் தமிழக-கேரள எல்லை பகுதியாக விளங்ககூடிய புளியரை சோதனை சாவடியில் சுகாதார துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனை மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

கேரளாவில் இருந்து தமிழகத்தில் நுழையக்கூடிய வாகனங்களை சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் உடல் வெப்ப பரிசோதனையை கண்காணித்து வருகின்றனர்.

இதில் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்த செல்லப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்படுவதாக தெரிவித்தனர்.

மேலும் இந்த சோதனையில் 24 மணி நேரமும் சுகாதாரத் துறையினர் மூன்று குழுக்களாக செயல்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 16 Sep 2023 7:55 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...