தென்காசி அருகே அன்னையர் தினத்தை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்

தென்காசி அருகே  அன்னையர் தினத்தை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்
X

அகரகட்டில் அன்னையர் தினத்தை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

அன்னையர் தினத்தை முன்னிட்டு தென்காசி அருகே இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

அன்னையர் தினத்தை முன்னிட்டு தென்காசி அருகே இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

தென்காசி அடுத்த அகரகட்டில் அன்னையர் தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் பொதுமக்கள் நலனுக்காக ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் சிந்து மொழி ஏற்பாட்டில் இலவச கண் சிகிச்சை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 8 மணிக்கு துவங்கிய இலவச கண் சிகிச்சை முகாமிற்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து 200க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு கண்களை பரிசோதனை செய்தனர். மருத்துவர்கள் கண்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளையும் மருந்துகளையும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சுரண்டை நகர்மன்ற தலைவர் பள்ளி முருகன், ஆய்க்குடி பேரூராட்சித் தலைவர் சுந்தர் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?