/* */

செங்கோட்டை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ

செங்கோட்டை அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க, வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

HIGHLIGHTS

செங்கோட்டை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ
X

செங்கோட்டை குண்டாறு அணைக்கு அருகே உள்ள பணிமுண்டன் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீ.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை குண்டாறு அணைக்கு அருகே உள்ள பணிமுண்டன் வனப்பகுதியில் தீ பற்றி எரிய தொடங்கியது. சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பற்றிய தீ வெயிலால் காய்ந்திருந்த சுக்கு, நாரி புல் போன்ற எளிதில் தீ பற்றும் புற்களால் மிக வேகமாக பரவியது.

தீ குறித்த தகவல் அறிந்த செங்கோட்டை வனத்துறை மற்றும் களக்காடு முண்டண்துறை வனப்பகுதியினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். செங்கோட்டை வனச்சரக அலுவலர் பாலகிருஷ்ணன், செங்கோட்டை வனவர் பாண்டியராஜன், குற்றாலம் வனவர் அழகர் ராஜா, வேட்டை தடுப்பு காவலர்கள், வனக்காப்பாளர்கள் 40 க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

Updated On: 10 March 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  2. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  6. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  8. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்