/* */

மின்சாரம் பாய்ந்து ஊழியர் பரிதாப பலி

மின்சாரம் பாய்ந்து ஊழியர் பரிதாப பலி
X

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அடவிநயினார் அணையில் ஷட்டரை பழுது பார்த்த போது மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலியானார்.

திருச்சி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்த சந்தனராஜ் என்பவரது மகன் ஜான்சன் ரூபன் ( 20) மற்றும் இவருடன் 5க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நீண்ட நாட்களாக சரி செய்யப்படாமல் இருந்த அணையின் மேட்டு கால் ஷட்டரை சரி செய்யும் பணியை பொதுப்பணித்துறை சார்பில் கடந்த 3 நாட்களாக சரி செய்து வந்தனர். இதில் சம்பவத்தன்று சட்டர் பணி முடிந்த நிலையில் ஷட்டர் மின் இணைப்பை சரி செய்யும்பொழுது எதிர்பாராதவிதமாக ஜான்சன் ரூபன் மீது மின்சாரம் பாய்ந்து 28 அடி நீருள்ள அணையில் தூக்கி வீசப்பட்டு நீரில் மூழ்கினர்.

உடன் பணி செய்தவர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்பொழுது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்ததாக கூறினர். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 April 2021 5:55 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  3. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  9. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?