/* */

சங்கிலி பூதத்தார் ஆலயத்தில் கொடை விழா: பால்குடம் எடுத்த பக்தர்கள்

சங்கிலி பூதத்தார் ஆலயத்தில் நடைபெற்ற கொடை விழாவில் நூற்றுக்கணக்கானோர் பால்குடம் எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

HIGHLIGHTS

சங்கிலி பூதத்தார் ஆலயத்தில் கொடை விழா: பால்குடம் எடுத்த பக்தர்கள்
X

பால்குடம் எடுத்த பக்தர்கள்.

தென்காசி மாவட்டம் அச்சம்புதூர் அருகே உள்ள நெடுவயல் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சங்கிலி பூதத்தார் கோவில் அமைந்துள்ளது. வன்னியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை கொடைவிழா நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் கோவில் கொடை சமயத்தில் பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டது.

இந்தாண்டுக்கான கோவில் கொடை விழா நேற்று தொடங்கியது. இன்று காலை சுவாமி சிவனுக்கு சிறப்பு பூஜைகளுடன் இரண்டாம் நாள் கொடை தொடங்கியது. காலை பால்குடம் எடுக்கும் வைபவம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் பால் குடம் எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து சுவாமி சங்கிலி பூதத்தாருக்கு அபிஷேக நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது . மாலை பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு சாமக்கொடை, நாளை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியோடு விழா நிறைவு பெறுகிறது.

Updated On: 13 May 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’