/* */

தென்காசியில் பிரச்சாரத்தின் போது மோதிக்கொண்ட தி.மு.க. நிர்வாகிகள்

தென்காசியில் வேட்பாளருக்கு ஆதரவான பிரச்சாரத்தின் போது மோதிக்கொண்ட தி.மு.க. நிர்வாகிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

தென்காசியில் பிரச்சாரத்தின் போது மோதிக்கொண்ட தி.மு.க. நிர்வாகிகள்
X

திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் பிரச்சாரத்தின் போது திமுக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்க முற்பட்டனர்.

திமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது உட்கட்சி பூசலால் நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக ராணி ஸ்ரீகுமார் போட்டியிடுகிறார். திமுக வேட்பாளரான ராணி ஸ்ரீகுமார் இன்று கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சொக்கம்பட்டி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, கடையநல்லூர் ஒன்றிய கவுன்சிலராக உள்ள அருணாச்சலம் என்பவர் பிரச்சாரம் குறித்து உரிய அறிவிப்பு கட்சி நிர்வாகிகளிடம் கொடுக்காமல் எப்படி பிரச்சாரம் செய்ய வரலாம் எனக் கூறி பிரச்சனையில் ஈடுபட்ட நிலையில், தொடர்ந்து இரு தரப்பினரிடம் வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி கைகலப்பு வரை சென்றது.

இந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்திய நிலையில், திமுக வேட்பாளரான ராணி ஸ்ரீகுமார் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது திமுகவினருடைய கோஷ்டி மோதல் ஏற்பட்ட சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக சமீப காலமாக திமுக நிர்வாகிகளிடம் ஒற்றுமையின்மை காரணமாக கோஷ்டி பூசலானது தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலையில் தற்போது வேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பொதுமக்கள் மத்தியில் மோதிக்கொண்ட சம்பவம் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் கடையநல்லூர் பகுதியில் பிரச்சாரத்திற்கு சென்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாருக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லதுரை தலைமையிலான நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அப்போதும் அங்கேயும் இது போன்ற கோஷ்டி பூசலால் நிர்வாகிகள் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்டனர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 8 April 2024 10:17 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...