தமிழக கேரளா எல்லையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தமிழக கேரளா எல்லையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தமிழக கேரளா எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ஆய்வு மேற்கொண்டனர்.

நிபா வைரஸ் எதிரொலி காரணமாக தமிழக கேரளா எல்லையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ஆய்வு மேற்கொண்டார்.

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி காரணமாக தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லையான புளியறையில் சுகாதாரத் துறை சார்பில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்

கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்து சிறுவன் உயிரிழப்பு மற்றும் பல்வேறு நபர்களுக்கு வைரஸ் தொற்று பரவிய நிலையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக

தமிழக - கேரள எல்லை பகுதிகளில் நிபா வைரஸ் குறித்த சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு மருத்துவத்துறை சார்பில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் புளியரை அருகே உள்ள தமிழக கேரளா எல்லைப் பகுதி சோதனைச் சாவடியில் நிபா வைரஸ் சிறப்பு கண்காணிப்பு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரம் செயல்படக்கூடிய இந்த சோதனைச் சாவடியில் மூன்று நிபா வைரஸ் களப் பணியாளர்கள், ஒரு சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் மற்றும் மூன்று குழுக்களாக மூன்று வேளை அடிப்படையில் இந்த ஸ்கிரீனிங் சோதனை நடைபெற்று வருகிறது.

சோதனை சாவடியில் இன்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் முழுமையான பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனரா என்பதை பார்வையிட்டார். மேலும்

இதில் யாருக்கேனும் காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்ப அறிவுறுத்தினார்.

Tags

Next Story