/* */

வெயிலை சமாளிக்க நீர்,மோர் பந்தல் திறப்பு

வெயிலை சமாளிக்க நீர்,மோர் பந்தல் திறப்பு
X

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

கடையநல்லூரில் நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் கோடை வெயிலை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதி நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் மற்றும் சானிடைசர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பேராசிரியர் செல்லத்துரை முன்னிலை வகித்தார்.

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை, தனுஷ் குமார் எம்.பி ஆகியோர் பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர்மோர் வழங்கி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளர் சேகனா, முகம்மது அலி, மசூது, மைதீன் பிச்சை, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், ஒன்றிய துணை செயலாளர் ஷாஜகான், ஆசாத், முருகையா, ஈஸ்வரன், நகர மாணவரணி பெருமாள் துரை,மணிகண்டன், மூர்த்தி, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் இன்பராஜ், காஜா, அசன், அரபா வகாப், ஆதினம், மயில்சாமி,மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கருப்பண்ணன், சீதாராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 April 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  3. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  4. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி
  6. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  8. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  9. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்