4 ஆண்டுகளில் 2 பேரை விண்ணிற்கு அனுப்பும் திட்டம் உள்ளது - ஆதித்யா எல் ஒன் திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி

4 ஆண்டுகளில் 2 பேரை விண்ணிற்கு அனுப்பும் திட்டம் உள்ளது - ஆதித்யா எல் ஒன் திட்ட இயக்குனர்  நிகர் ஷாஜி
X

ஆதித்யா எல் ஒன் திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

Aditya L1 Plan Director Interview தென்காசி கடையநல்லுார் அரசுமகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடிய ஆதித்யா எல்ஒன் திட்ட இயக்குனர் நிகர்ஷாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Aditya L1 Plan Director Interview

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அரசு மகளிர்மேல் நிலைப்பள்ளியில் ஆதித்யா எல் 1 திட்ட இயக்குனர் நிஹார் ஷாஜி மாணவிகளுடன் கலந்துரையாடினார் மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார் அப்பொது ஓவிய ஆசிரியை நிஹார் ஷாஜியை வரைந்த படத்தை அவருக்கு பரிசளித்தார் அதற்கு முன்பாக நிஹார் ஷாஜிக்கு பாடம் எடுத்த ஆசிரியர் அவரை பாராட்டி பேசினார் அப்போது அவர் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தார் பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது பேசிய அவர் ஐ எஸ் ஆர் ஓ பணி செய்வதை நிறுத்தாது அடுத்ததாக சந்திராயன் திட்டங்கள் உள்ளது அடுத்ததாக ககன்யான் ஸ்பேஸ் ஸ்டேசன் அமைப்பது அடுத்த கோள்களுக்கு செல்வது உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளது

வானிலை குறித்த இந்தியன் மெட்ரலாஜிக்கலுக்காக தனியாக அனுப்பபட்டுள்ளது 2 சாட்டிலைட்கள் இயக்கப்பட்டுவருகிறது இந்தியன் மெட்டராலஜிக்கல் டிப்பார்ட்மண்ட் தனியாக டேட்டாக்களை ஆய்வு செய்கிறது எல் 1 என்பது இமாஜினரி பிளானட் இரு கோள்களுக்கு இடையேயான சிறிய கிராவிட்டி போர்ஸ் கண்டறிந்து செயல்படுவது எல் 1 பாயிண்ட் பூமியும் சூரியனையும் சரியாக சுழலும் புள்ளி அதனால் அது சூரியனை 24/7 மறைக்காது

தற்போது வரை டேட்டாக்கள் அனுப்பி வருகிறது அதனை சரியாக காலிப்ரேசன் செய்து தரவேண்டும் அதனால் காலிபரேசன் வேலைகள் நடக்கிறது அதன் பின்னர் பொதுவாக தரப்படும் அதில் இருந்து அறிவியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்வார்கள்

நிறைய ஸ்பேஸ் டெபிட் இருக்கு தற்போது தேவை என்பதால் அதிகமான நாடுகள் விண்கலங்கள் விடுகிறது டெப்டிஸ் பிரச்சனைகளுக்காக சிறப்பான விதிகள் கடைப்பிடிக்கப்பட உள்ளது. ககஞான் திட்டத்தில் 4 வருடத்தில் 2 பேரை அனுப்பும் திட்டம் உள்ளது.அப்ளிகேசன் ஓரியண்டட் விண்கலங்கள் தனியார் செய்ய உள்ளனர் அதனால் நிறைய திட்டங்கள் உள்ளது.இப்போது இண்டர் நெட் துரு சேட்டிலைட் பிளான் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Tags

Next Story