/* */

கடையநல்லூர் பகுதியில் 7 பேருக்கு கொரானா தொற்று உறுதி

Corona Cases in Tamilnadu - கடையநல்லூர் பகுதியில் 7 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கடையநல்லூர் பகுதியில் 7 பேருக்கு கொரானா  தொற்று உறுதி
X

பைல் படம்.

Corona Cases in Tamilnadu -கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் 5 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதையடுத்து நகராட்சிப் பகுதியில் தடுப்பு நடவடிக்கையை நகராட்சி சுகாதார அலுவலர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த சிலருக்கு கொரோனா தொற்று குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கடையநல்லூர், வார்டு 17, 15, 31, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் தஞ்சாவூரிலிருந்து கடையநல்லூருக்கு வேலை விஷயமாக வந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதே போல் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்களபுரம், பாலஅருணாசலபுரம் பகுதியைச் சேர்ந்த 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடையநல்லூர் நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோ சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல் சிவா கண்ணன் மற்றும் அதிகாரிகள் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தொடங்கினர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

அந்தப் பகுதிகளில் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ள நபர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் ஆலோசனை பெறவும், நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகிக்கப்பட்டது. தொற்று உள்ள வீடுகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வீட்டில் உள்ளவர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 24 Jun 2022 10:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...