ரயில் மறியலில் ஈடுபட முயன்ற பெண்கள் உட்பட 130 பேர் கைது

செங்கோட்டையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்
ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்கள் உட்பட காங்கிரஸ் கட்சியினர் 130 பேர் கைது செய்யப்பட்டனர்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்டங்களாக.காங்கிரசார் தொடர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தை தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியினரின் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், செங்கோட்டை ரயில் நிலையத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் செங்கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வருகை தந்தனர்.அவர்களை போலீசார் பேரிக்காடுகளை வைத்து தடுத்து நிறுத்திய நிலையில், போலீசார்களுக்கும், காங்கிரசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.மேலும்,போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .
இந்த நிலையில், தற்போது செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பு 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் சாலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பே காங்கிரசாரை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர். சற்று தூரம் சென்ற வாகனத்தை காங்கிரசார் மறித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, மாவட்ட பஞ்சாயத்து துனைத் தலைவர் உதயகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் கிளங்காடு மணி, வட்டாரத் தலைவர்கள் செங்கோட்டை கார்வின், தென்காசி பெருமாள், வாசுதேவநல்லூர் மகேந்திரன், நகரத் தலைவர்கள் சுரண்டை ஜெயபால், தென்காசி மாடசாமி ஜோதிடர், கீழப்பாவூர் சிங்கக்குட்டி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu