வீரவாஞ்சிநாதன் 110வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

வீரவாஞ்சிநாதன் 110வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
X

வீரவாஞ்சிநாதன் 110வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

செங்கோட்டையில் வீரவாஞ்சிநாதன் 110வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 110 நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. செங்கோட்டையில் உள்ள மணி மண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, வாஞ்சிநாதனின் வாரிசு வாஞ்சி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், கட்சி பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மணிமண்டபத்தில் வாஞ்சிநாதனின் வரலாற்றை ஓவியமாக வரைய வேண்டும். செங்கோட்டையில் உள்ள கணித மேதை SS பிள்ளை வரலாறு மறைக்கபடுகிறது. அதனை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேங்கட ரமணா கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?