/* */

காவல்துறையினரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை. எஸ்பி வழங்கினார்

தென்காசி மாவட்டத்தில் காவல்துறையினரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை மாவட்ட எஸ்பி வழங்கினார்.

HIGHLIGHTS

காவல்துறையினரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை. எஸ்பி வழங்கினார்
X

காவல்துறையினரின் 15 குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையினை தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வழங்கினார்.

தென்காசி மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் குழந்தைகளின் கல்விக்கு காவல்துறையின் சேம நல நிதி மூலம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2019-2020 ஆம் ஆண்டு பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற காவல்துறையினரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கும் நிகழ்ச்சி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கினார். இதில் கலைக் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு 10,000 ரூபாயும், பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 18,000 ரூபாயும் வழங்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில் காவல்துறையில் பணிபுரியும் உங்கள் பெற்றோர்கள் பெருமைப்படும் படி நடந்துகொண்டு உயர் பதவியை அடைய வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார். உதவி தொகை பெற்றுக்கொண்ட மாணவ மாணவிகள் தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

Updated On: 9 Jun 2021 10:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...