/* */

சொத்தில் பங்கு கேட்டு உறவினரை தாக்கியவர் கைது

சொத்தில் பங்கு கேட்டு உறவினரை தாக்கியவர் கைது
X

செங்கோட்டையில் சொத்தில் பங்கு கேட்டு பெரியப்பாவை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமலாபுரம் பகுதியில் வசித்து வரும் முனியாண்டி என்பவரின் தாயார் பெயரிலுள்ள இடம் ஊர் பெரியவர்களின் முன்னிலையில் அவருக்கும் அவரது தம்பிக்கும் சரிபாதியாக பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரிக்கப்பட்ட இடத்தை முனியாண்டியின் உடன் பிறந்த தம்பி மகனான இசக்கிமுத்து என்பவர் முனியாண்டியிடம் இடத்தில் அதிக பங்கு கேட்டு அடிக்கடி பிரச்சனை செய்து வந்தாராம்.

இந்நிலையில் முனியாண்டி சம்பவத்தன்று அவரது வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்த போது அங்கு வந்த இசக்கிமுத்து, முனியாண்டியிடம் இடத்தில் அதிக பங்கு கேட்டு அசிங்கமாக பேசி மிதித்து காயப்படுத்தியுள்ளார். இதுகுறித்து முனியாண்டி செங்கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி இசக்கிமுத்து(36) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

Updated On: 21 Jan 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...