/* */

ஆலய நிகழ்ச்சிக்கு தடை விதித்த அறநிலையத்துறை அதிகாரி: மறியல் போராட்டம் அறிவிப்பு

கடையம் அருகே பிரசித்தி பெற்ற ஆலய விழாவிற்கு அனுமதி மறுத்ததால், அறநிலையத்துறை நிர்வாக அதிகாரியை கண்டித்து மறியல் போராட்டம் அறிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

ஆலய நிகழ்ச்சிக்கு தடை விதித்த  அறநிலையத்துறை அதிகாரி: மறியல் போராட்டம் அறிவிப்பு
X

போராட்ட அறிவிப்பு போஸ்டர்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே சிவசைலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீபரமகல்யாணி அம்பாள் உடனுறை சிவசைலநாதர் சுவாமி கோவில். இந்த கோவில் பழைமையும் புராதனமும் வாய்ந்தது. இந்தக் கோவிலில் உள்ள பரமகல்யாணி அம்மன் ஆம்பூரில் பிறந்ததாக ஐதீகம்.

அதனால் வருடத்துக்கு ஒரு முறை ஆம்பூரில் நடைபெறும் வசந்த அழைப்பு எனும் நிகழ்ச்சிக்கு சிவசைலநாதர் மற்றும் கல்யாணி அம்பாள் உற்சவர் சிலைகள் இங்கு கொண்டு வந்து வைத்து பூஜைகள் நடைபெறும்

ஆம்பூரில் உள்ள நீர்ப்பாசன கமிட்டி பொறுப்பேற்று இந்த "வசந்த அழைப்பு நிகழ்ச்சியை" ஆண்டுதோறும் நடத்தி வந்தனர். பல ஆண்டுகள் மரபாக மக்கள் மத்தியில் இந்த விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு திடீரென நடத்த தடை விதிக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வசந்த அழைப்பு நிகழ்ச்சி நடத்த கோவில் நிர்வாக அலுவலர் அனுமதி தர மறுத்து விட்டதை கண்டித்து வரும் மே 6ம் தேதி ஆம்பூரில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். சுற்றுவட்டார மக்கள் பலரும் இதில் பங்கேற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On: 4 May 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’