/* */

விவசாய பயிர் நடவு முறைகள் குறித்து மாணவிகள் விளக்கம்

விவசாய பயிர் நடவு முறைகள் குறித்து மாணவிகள் விளக்கம்
X

தென்காசி மாவட்டம் கடையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு தேவையான பயிர் நடவு முறைகள் குறித்து செயல்முறை பயிற்சி விளக்கம் அளித்தனர்.

தென்காசி மாவட்டம் கடையத்தில் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ திட்டத்தின்படி கடையம் சுற்றுவட்டார பகுதிகளான வெய்கால்பட்டி மந்தியூர், உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகளின் வயல்களுக்கு நேரடியாகச் சென்று செயல் விளக்கமாக பஞ்சகவ்யம் தயாரிப்பது மற்றும் அறிவியல் முறைகளில் விவசாயம் செய்வது குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.

ஒருங்கிணைந்த பண்ணை முறையில் ஆடு வளர்ப்பு, மீன்வளர்ப்பு செய்வது குறித்தும் மாடி தோட்டம் மற்றும் பக்கவாட்டு சுவர்களில் தோட்டம் அமைத்து காய்கறி வளர்ப்பது குறித்தும் மாதிரி வடிவங்களை தயார் செய்து விவசாயிகளுக்கு விளக்கி காண்பித்தனர். விவசாயிகள் திரளானோர் வந்து ஆர்வமுடன் கண்காட்சியை பார்த்து சென்றனர். இந்நிகழ்ச்சியில் எழிலரசி, சுபத்ரா, கார்த்திகா ,சந்தியா, அஸ்மினா, கார்த்தியாயினி ஷர்மிளா ஐஸ்வர்யா நித்தியமாலதி, கிறிஸ்டினா ஆகியோர் கலந்து கொண்டு செயல் விளக்கத்தை செய்து காட்டினார்கள்.

Updated On: 14 April 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  6. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  7. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்