/* */

கடையத்தில் விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படும் : அதிகாரிகள் தகவல்

கடையத்தில் கொள்முதல் செய்யப்படாத விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

HIGHLIGHTS

கடையத்தில் விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படும் : அதிகாரிகள் தகவல்
X

கடையத்தில் விவசாயிகள் அடுக்கி  வைத்திருக்கும் நெல்மூட்டைகள்.

தென்காசி மாவட்டம், கடையம் சந்தையில் அரசு கொள்முதல் செய்யாமல் முளை விட்ட நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடையம் சுற்றுப் புறங்களில் பிசான பருவத்தில் பயிர் செய்த நெல்லை சந்தையில் அமைக்கப்பட்ட தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக மார்ச் மாதம் விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். நெல்லை கொள்முதல் செய்வதாகக் கூறிய அதிகாரிகள் சுமார் 50 நாள்கள் கடந்த நிலையில் மே முதல் வாரத்தில் நெல் தரமானதாக இல்லையெனக் கூறி கொள்முதல் செய்ய முடியாது எனத் தெரிவித்தனர்.

இது குறித்து உயரதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் விவசாயிகள் புகாரளித்தனர். இதையடுத்து நேற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பகுதி அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் அதிகாரிகள் தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகளைப் பார்வையிட்டார். அப்போது நாளை (இன்று) நெல் கொள்முதல் செய்யப்படும் என்று விவசாயிகளிடம் தெரிவித்தார்.

Updated On: 21 May 2021 10:44 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...