/* */

டூவீலரில் சென்ற போது விபத்து: பெண் பலி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, டூவிலரில் சென்றபோது கீழே விழுந்து, பெண் பலியானார்.

HIGHLIGHTS

டூவீலரில் சென்ற போது விபத்து: பெண் பலி
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேஅய்யனார்குளத்தை சேர்ந்தவர் பரமசிவன். இவரது மனைவி சுப்புலட்சுமி(52). இருவரும் தனது மூன்றாவது மகள் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுப்பதற்காக முக்கூடல் அருகே உள்ள அரசன்குளத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.

மருதம்புத்தூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது, பின்னால் இருந்த சுப்புலட்சுமி நிலைதடுமாறி மொபட்டில் இருந்து சாலையில் விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த சுப்புலட்சுமியை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைகாக பாளையங்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக, சுப்புலட்சுமி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 April 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்