மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது,டிராக்டர் பறிமுதல்

மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது,டிராக்டர் பறிமுதல்
X

தென்காசி மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரட்டைகுளம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக உரிய அனுமதியின்றி குலையநேரி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ராமர் என்பவரின் மகன் முருகன்(45) என்பவர் மணல் திருட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தார். காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவரிடமிருந்து திருட்டுக்கு பயன்படுத்திய டிராக்டர் மற்றும் ஒரு யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி