/* */

சுரண்டை அருகே மீன் வலையில் சிக்கி ஒருவர் பலி

சுரண்டை அருகே மீன் வலையில் சிக்கி ஒருவர் பலி
X

சுரண்டை அருகே மீன் வலையில் சிக்கி ஒருவர் பரிதாபமாக பலியானார்.

வீரகேரளம்புதூர் வட்டம் ராஜகோபாலபேரி சிஎஸ்ஐ சர்ச் தெருவைச் சேர்ந்த தங்கையா என்பவர் மகன் மாசிலாமணி (56) . இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஊரணியில் ஆடுகளை குளிப்பாட்டுவது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று மாலை ஆட்டினை குளிப்பாட்ட ஊரணிக்கு வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஊரணியில் தவறி விழுந்துள்ளார் இதில் மீன் வளர்ப்பதற்காக வைக்கப்பட்ட வலையில் சிக்கிய அவர் அதிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து உயிரிழந்தார்.இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வீரகேரளம்புதூர் போலீசார் இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 Dec 2020 4:55 AM GMT

Related News