/* */

கடையம் ராமநதி அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறப்பு

தென்காசி மாவட்டம் கடையம் ராமநதி அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

HIGHLIGHTS

கடையம் ராமநதி அணையில் இருந்து பாசனத்திற்காக  இன்று தண்ணீர் திறப்பு
X

தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் ராமநதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராமநதி அணை உள்ளது. இந்த அணையின் மூலம் கடையம்,பொட்டல்புதூர்,உட்பட 11 கிராமங்களில் 21 குளங்கள் நிரம்புகிறது.

5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் பிசான சாகுபடிக்காக ராமநதி அணையில் இருந்து 03.11.2021 முதல் 30.03.2022 வரை 148 நாட்களுக்கு வினாடிக்கு 60 கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப திறந்துவிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தலைமையில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் தென்காசி மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் உள்ளிட்டோர் முன்னிலையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடார், பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...