/* */

ஆழ்வார்குறிச்சி: சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த 3 பேர் கைது

ஆழ்வார்குறிச்சி அருகே, சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஆழ்வார்குறிச்சி: சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த 3 பேர் கைது
X

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள், போதைப் பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில், ஆழ்வார்குறிச்சிகாவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவன்குளம் ரயில்வே கேட் அருகே, சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த கருத்தப்பிள்ளையூரை சேர்ந்த அமல்ராஜ் (55) என்பவரை, சார்பு ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முப்புடாதி அம்மன் கோவில் அருகே மது பாட்டில்களை விற்பனை செய்த மதன் (21) என்பவரை, சார்பு ஆய்வாளர் கமலாதேவி, மேலும் சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே மது பாட்டில்களில் விற்பனை செய்ததிருவானை என்பவரின் மனைவி செண்பகவல்லி (69) என்பவரை சார்பு ஆய்வாளர் ஜெயக்குமாரும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 88 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On: 30 Sep 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்