Begin typing your search above and press return to search.
குப்பைக்காக தோண்டிய பள்ளங்களில் முதுமக்கள் தாழி: கடையத்தில் பரபரப்பு
கடையத்தில் குப்பை சேமிப்பு கிடங்கில் தோண்டிய பள்ளங்களில் முதுமக்கள் தாழி கிடைத்ததால் பரபரப்பு.
HIGHLIGHTS
குப்பைக்காக தோண்டிய பள்ளங்களில் முதுமக்கள் தாழிகள்..! கடையத்தில் பரபரப்பு
கடையம் ஜம்புநதியை ஒட்டி தெற்கு கடையம் பஞ்சாயத்துக்கு சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கில் குப்பைகளை கொட்டுவதற்காக தோண்டப்பட்ட ராட்சத பள்ளங்களை தோண்டிய போது முதுமக்கள் தாழிகள், பழங்கால ஓடுகள், சாமி சிலைகள் கிடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் இந்த விஷயத்தை வேண்டுமென்றே தொல்லியல் துறைக்கு தெரியாமல் மறைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொல்லியல் துறை இந்த இடத்தில் முறையான ஆய்வு மேற்கொண்டால் கீழடியை போன்றே பழங்கால தமிழர்களின் வரலாறு வெளிப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.