கர்ப்பிணி பெண்களுக்கு நிலவேம்பு கசாயம்

கர்ப்பிணி பெண்களுக்கு நிலவேம்பு கசாயம்
X
கடையம் சித்தா மருத்துவமனை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம். கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்பட்டு வரும் சித்தா மருத்துவமனை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு நிலவேம்பு கசாய குடிநீரும், பொதுமக்களுக்கு கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது. நிலவேம்பு கசாய குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை கர்ப்பிணி பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் சித்த மருத்துவர் தமிழ் முதல்வி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் சித்த மருத்துவ ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி