கடையம் அருகே பெண் மீது தாக்குதல்: லத்தியுடன் போலீசார் செல்லும் சிசிடிவி காட்சி வைரல்

Police Attack | Tenkasi News

கையில் லத்தியுடன் போலீசார் வீட்டிற்கு சென்றுவரும் சி.சி.டி.வி. காட்சி.

Police Attack -கடையம் அருகே போலீசார் தாக்கியதாக பெண் மருத்துவமனையில் அனுமதி - கையில் லத்தியுடன் போலீசார் வீட்டிற்கு சென்றுவரும் சி.சி.டி.வி. காட்சிகள் வைரல்

Police Attack -தென்காசி மாவட்டம், கடையம் அருகேயுள்ள மடத்தூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் செங்கல் சூளை மற்றும் எம்சாண்ட் குவாரி சொந்தமாக நடத்தி வருகிறார். இவருடைய மனைவி செந்தாமரை கடந்த 17 -ந் தேதி வீட்டில் இருந்தபோது அவரது வீட்டுக்கு மதியம் 3 மணி அளவில் காவல்துறை சீருடையில் வந்த இருவர் உன் வீட்டுக்காரர் எங்கே என்று கேட்டுவிட்டு செந்தாமரையை தாக்கியதாகவும், அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவர் வீட்டுக்கு கடந்த 17 -ந் தேதி மதியம் 3 மணி அளவில் ஒரு வெள்ளை நிற பொலிரோவில் காவல்துறை சீருடையில் இருவர் வருவது போலவும், ஒருவர் கையில் லத்தி வைத்திருப்பது போலவும் சி.சி.டி.வி வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் ஆலங்குளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பொன்னரசு கையில் பிரம்புடனும் அவருடைய வாகன ஓட்டுனர் பாலமுருகன் ஆகியோர் வரும் காட்சிகளால் பலத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story