/* */

கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையால் பரபரப்பு

கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட சோதனையால் பரபரப்பு நிலவியது

HIGHLIGHTS

கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையால் பரபரப்பு
X

தென்காசி மாவட்டம் கடையம் ராமநதி செல்லும் சாலையில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது . இந்த அலுவலகத்தில் நாள்தோறும் 40க்கும் மேற்பட்ட திருமண பதிவு, சங்கம் பதிவு மற்றும் வீட்டு மனைகளின் பத்திரப்பதிவு, அடமான பதிவு என பதியப்பட்டு வருகிறது.

இங்கு பதியப்படும் ஒவ்வொரு பத்திரப்பதிவுக்கும் லஞ்சம் பெறப்படுவதாக தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் தீபாவளி வசூல் நடைபெறுவதாகவும், சார் பதிவாளர் மோகன் தாஸ் தனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மாலை கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தை சுற்றி வளைத்து ஊழியர்கள், ஊழியர் அல்லாத பொதுமக்களையும் தங்களது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். இதில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி எஸ்கால் தலைமையில், லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் ராபின்சன் ஞானசிங் உள்பட 7 பேர் துருவி துருவி விசாரித்தனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 12 மணிக்கு முடிவுக்கு வந்தது.

இந்த சோதனையில் கணக்கில் வராத 1.51லட்சம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சார்பதிவாளர் மோகன்தாஸ் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதித்துள்ளனர். இந்த சம்பவம் கடையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 30 Oct 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  2. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  3. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  4. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  9. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  10. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!