தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பெண்கள் கைது

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பெண்கள் கைது
X

தென்காசி மாவட்டம் கடையத்தில் ஜோசப் ஸ்டாலின் என்பவர் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த ஐந்து பெண்கள் சேலைகள் வாங்குவது போல நடித்து கடையில் இருந்த சில சேலைகளை திருடிச் சென்றுள்ளனர். இதே போல் மாலையிலும், அதே கடைக்கு வந்த சேலைகளை திருட முயன்றபோது ஜோசப்பிடமும், அங்கிருந்த பிற வாடிக்கையாளர்களிடமும் கையும், களவுமாக சிக்கிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து ஜோசப் காவல்துறையினருக்கு தகவல் தர, ஐந்து பெண்களையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். விசாரணையில் ஏற்கெனவே இந்த கடைக்கு மூன்று முறை வந்து 25 பட்டு சேலைகளை அவர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது

Tags

Next Story
ai in future agriculture