ஆலங்குளத்தில் இளைஞர்களின் முயற்சியால் 250 வருட ஆலமரம் மாற்று இடத்தில் நடவு

ஆலங்குளத்தில் இளைஞர்களின் முயற்சியால் 250 வருட பழமையான ஆலமரம் வேருடன் பிடுங்கப்பட்டு மாற்று இடத்தில் நடவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஆலங்குளத்தில் இளைஞர்களின் முயற்சியால் 250 வருட ஆலமரம் மாற்று இடத்தில் நடவு
X

வேருடன் பிடுங்கப்படும் 250  ஆண்டு பழமையான ஆலமரம்.

இளைஞர்களின் முயற்சியால் ஆலங்குளத்தில் 250 வருட பழமையான ஆலமரம் நான்கு வழிச்சாலை பணிக்காக வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடப்பட்டது.

நெல்லை தென்காசி நான்குவழிச்சாலை பணிக்காக நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஒப்பந்ததாரர்களால் சாலையோர மரங்கள் வெட்டப்பட்டும், சில இடங்களில் மாற்று இடங்களில் மறுநடவு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. ஆலங்குளம் பஸ் நிலையம் கீழ்புறம் சுமார் 250 ஆண்டுக்கு மேலான பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது. சாலை பணிக்காக இந்த மரம் கிளைகள் வெட்டும் பணி கடந்த வாரம் துவங்கியது.

நடப்பட்ட ஆலமரம்.

ஆலங்குளத்தின் பெருமையாக கருதப்படும் இந்த ஆலமரத்தை மறுநடவு செய்ய வேண்டும் என முடிவு செய்த ஆலங்குளம் பசுமை இயக்கம் தலைவர் சாமுவேல் பிரபு, அசுரா நண்பர்கள் ராஜா, குணா ஆகியோர் நெடுஞ்சாலைத்துறையினரிடம் அனுமதி பெற்றனர். இதனையெடுத்து அந்த மரம் வெட்டாமல் நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் சிலர் பண உதவி செய்தனர். இதனையடுத்து நேற்றைய தினம் இரவு 2 கிரேன், 2ஜேசிபி உதவியுடன் 16 டன் எடை உள்ள ஆலமரம் வேருடன் அகற்றப்பட்டு கடும் சிரமத்திற்கு இடையே ஆலங்குளம் தொட்டியான்குளத்தின் கரையோரம் நடப்பட்டது.

இந்த பணியில் ஆலங்குளத்தில் உள்ள பொதுமக்கள், இளைஞர்கள், ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மரத்தை மாற்றி நடுவதற்கு முயற்சி எடுத்த ஆலங்குளம் பசுமை இயக்கம் மற்றும் அசுரா நண்பர்களை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டினார்கள்.

Updated On: 26 May 2022 5:54 AM GMT

Related News

Latest News

  1. க்ரைம்
    தூத்துக்குடி அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர்...
  2. காங்கேயம்
    சிவன்மலை கோயில் மலைப் பாதையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 54 சோலாா்...
  3. தாராபுரம்
    குண்டடம்; 16 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் நல சங்கம் வெள்ள நிவாரண...
  5. திருப்பூர் மாநகர்
    அவிநாசி அருகே மதுக்கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகம் முன் திரண்ட...
  6. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு: 11 கடைகள் மீது...
  7. சென்னை
    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  8. ஆன்மீகம்
    Sabarimala Ayyappan temple- சபரிமலையில் பக்தர் கூட்டம் அதிகரிப்பு;...
  9. அரசியல்
    தெலுங்கானா மாநில முதல்வராக பதவி ஏற்றார் ரேவந்த் ரெட்டி
  10. தொழில்நுட்பம்
    சியோமி ரெட்மி 13C 5G: பட்ஜெட் ஃபோன்களின் புதிய சூப்பர்ஸ்டார்