/* */

ஆலங்குளம் அருகே ஊருக்குள் புகுந்த 10 அடி நீள மலைபாம்பு: தீயணைப்புத்துறை மீட்பு

ஆலங்குளம் அருகே ஊருக்குள் புகுந்த 10 அடி நீள மலைபாம்பை தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறையினர் மீட்டு வனத்துக்குள் விட்டனர்.

HIGHLIGHTS

ஆலங்குளம் அருகே ஊருக்குள் புகுந்த 10 அடி நீள மலைபாம்பு: தீயணைப்புத்துறை மீட்பு
X

ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பை மீட்ட தீயணைப்பு மற்றும் வனத்துறையினர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது ஆழ்வான் துலுக்கப்பட்டி கிராமம். இந்த ஊரின் குடியிருப்பு அருகே உள்ள முட்புதரில் நேற்று இரவு 7 மணியளவில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைபாம்பு ஒன்று கிடப்பதை அங்கு விளையாடிய சிறுவர்கள் பார்த்துள்ளனர்.

இதனால் அந்த மலைபாம்பை ஊரே திரண்டு வேடிக்கை பார்த்தது. இது குறித்து வனத்துறை மற்றும் ஆலங்குளம் தீயணைப்பு துறைக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் சுடலைவேல் தலைமையியல் சிறப்பு நிலைய அலுவலர் விசுவநாதன், சிறப்பு நிலைய அலுவலர் சிவக்குமார்,ரமேஷ், ஜஸ்டின் பாக்கியராஜ், திருமலை கணேசன், விவேக், செல்வராஜா மற்றும் வனக்காப்பாளர் டென்சிங் ஆகியோர் மலைபாம்பை மீட்டு ஆலங்குளம் ராமர் கோவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விட்டனர்.

Updated On: 10 Oct 2021 5:14 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்