Begin typing your search above and press return to search.
புதிய காவல் சோதனை சாவடி திறந்து வைப்பு
தென்காசி மாவட்டம் மாறாந்தையில் புதிய சோதனைச் சாவடியை மாவட்ட எஸ்பி, ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலங்குளத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள மாறாந்தையில் புதிய சோதனை சாவடியை மாவட்ட எஸ்பி., சுகுணா சிங் ரிப்பன் வெட்டி இன்று துவக்கி வைத்து,சுற்றுவ்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.மேலும் இந்நிகழ்ச்சியில் ஆலங்குளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னிவளவன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.