/* */

வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை
X

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே தேங்காய் வியாபாரி வீட்டில் சுமார் 50 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் பூமணி. தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மனைவியோடு நேற்று மதுரை மருத்துவமனைக்கு சென்றுள்ளார். வீட்டில் இருந்த மகன் சங்கர் பாவூர்சத்திரம் அருகே உள்ள புங்கம்பட்டிக்கு தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். மதியத்திற்கு மேல் வீடு திரும்பிய சங்கர் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்ட நிலையில் உள்ளே இருந்த சுமார் 50 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கப்பணம் 1 லட்ச ரூபாய் திருடு போனது தெரிய வந்துள்ளது.இது குறித்து சங்கர் பாவூர்சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த பாவூர்சத்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 23 Feb 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  2. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  4. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  7. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  8. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  9. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  10. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு