/* */

ஆலங்குளம் - திருமணம் பிடிக்காததால் இளைஞர் தற்கொலை.

மணப்பெண் பிடிக்காததால் மரணத்தை தழுவிய இளைஞன்.

HIGHLIGHTS

ஆலங்குளம் - திருமணம் பிடிக்காததால் இளைஞர் தற்கொலை.
X

ஆலங்குளம் தற்கொலை -மோதிலால் மகன் இசக்கிராஜ் @ இம்மானுவேல்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மணப்பெண் பிடிக்காததால் இளைஞர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆலங்குளம் அருகே மோதிலால் மகன் இசக்கிராஜ் என்ற இம்மானுவேல் 35. இவருக்கும் பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்ற நிலையில் இசக்கிராஜை காணவில்லையாம். உறவினர்கள் அக்கம் பக்கம் தேடிய நிலையில் கீழக் குத்தப்பாஞ்சான் சாலையில் உள்ள கிணற்று அருகில் அவரது செருப்பு மற்றும் செல்போன் கிடந்துள்ளது.

கிணற்றில் தற்கொலை செய்ய விழுந்திருக்கலாம் என்ற நோக்கில் ஆலங்குளம் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் அளிக்கப் பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் சுடலைவேல் தலைமையில் வீரர்கள் வந்து கிணற்றில் தேடி இசக்கிராஜை சடலமாக மீட்டனர். சம்பவம் தொடர்பாக கடையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 May 2021 5:59 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  2. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  3. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  6. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு