/* */

சீட் தராததால் தனித்து களமிறங்கிய அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்

கடையம் ஒன்றியத்தில், கட்சியில் சீட் கிடைக்காததால் அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், மகாலிங்கம் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

HIGHLIGHTS

சீட் தராததால் தனித்து களமிறங்கிய அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்
X

கவுன்சிலர் பதவிக்கு மனுதாக்கல் செய்த மகாலிங்கம்.

நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் வருகிற 6 மற்றும் 9 -ந் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 3 நாட்களாக மந்த நிலையில் காணப்பட்ட வேட்புமனு தாக்கல், இன்று களைகட்டி காணப்படுகிறது.

இந்நிலையில், முன்னாள் கடையம் அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் மகாலிங்கம் என்பவர் அக்கட்சியின் சார்பாக உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்பியதாக கூறப்படுகிறது.

ஆனால், இதற்கு கட்சியினர் மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் இன்று மகாலிங்கம் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். இவர் மனு தாக்கல் செய்தது கடையம் பகுதி அ.தி.மு.க வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 20 Sep 2021 1:25 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!