/* */

தென்காசி விவசாயிகள் -ஊரடங்கு காலத்தில்-வட்டார தோட்டக்கலைத்துறை உதவி.

தென்காசி மாவட்ட தோட்டக்கலைத்துணை இயக்குநர் சு.ஜெயபாரதிமாலதி விவசாயிகளுக்கு வேண்டுகோள்.

HIGHLIGHTS

தென்காசி விவசாயிகள் -ஊரடங்கு காலத்தில்-வட்டார தோட்டக்கலைத்துறை உதவி.
X
தென்காசி விவசாயம் (பழைய படம்)

தென்காசி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு வரும் காய்கறிகள், பழங்கள், மலர்கள், நறுமண மற்றும் வாசனை திரவிய பயிர்கள் உள்ளிட்ட விளை பொருள்களை ஊரடங்கு காலத்தில் தங்களது இடத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல அனுமதிச்சீட்டு தேவைப்படும் விவசாயிகள் அனைவரும் தங்களது வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு உடனடியாக பெற்றுக்கொண்டு பயன் பெறலாம்.

தற்போது பரவி வரும் கெரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இத்தகைய காலத்தில் வேளாண்-தோட்டக்கலை விளைபொருள்களான தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற காய்கறிகள், மா, நெல்லி, கொய்யா போன்ற பழ வகைகள் மற்றும் மல்லிகை, முல்லை உள்ளிட்ட மலர்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று சந்தைப்படுத்த விரும்பினால் அந்த விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் விளைபொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு நம் மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் ஒவ்வொரு வட்டாரத்திலும் உரிய அலுவலர்களால் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அனுமதிச்சீட்டு பெற விரும்பும் விவசாயிகள், உரிய விபரங்களோடு தங்களது வட்டார உதவி இயக்குநர்களை பின்வரும் அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டால் உடனடியாக அனுமதிச்சீட்டு வழங்கப்படுமெனவும் இதனை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறுமாறு விவசாயிகளை தென்காசி மாவட்ட தோட்டக்கலைத்துணை இயக்குநர் சு.ஜெயபாரதிமாலதி விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புக்கு :

வட்டாரஉதவி இயக்குநர்கள் அலைபேசி எண்கள் விபரம்

1. ஆலங்குளம் 9360598993,

2.கடையம் 8610022623,

3.கடையநல்லூர் மற்றும் செங்கோட்டை 9994710257,

4.சங்கரன்கோவில் 6381364503,

5.மேலநீலிதநல்லூர் 6369726724,

6.கீழப்பாவூர் மற்றும் தென்காசி 6383050078

7.குருவிகுளம் 8220547506,

8. வாசுதேவநல்லூர் 8072218387

Updated On: 20 May 2021 7:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு