குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

X
By - S. Esakki Raj, Reporter |31 Dec 2020 9:25 AM IST
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழை பெய்வதால் குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது, இதனால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. குற்றாலம் பிரதான அருவி யில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குற்றாலம் காவல்துறை சார்பில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அங்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புலி அருவி ஐந்தருவி ஆகிய பகுதிகளில் சில பணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதிக்கப்பட்டனர் இதமான காலசூழ்நிலை நிலவி வருகிறது.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu