Begin typing your search above and press return to search.
தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்திலும் அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை மழை இருக்காது; மாறாக, வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.