தமிழகத்தில் இன்று மட்டும் 1,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று மட்டும் 1,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X
கொரோனா பரிசோதனையில் தமிழகத்தில் இன்று மட்டும் 1,893 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனையில் தமிழகத்தில் இன்று மட்டும் 1,893 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது 20 ஆயிரத்து 363 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆயிரத்து 930 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 79 ஆயிரத்து 130 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 367ஆக அதிகரித்துள்ளது.

Tags

Next Story
ai marketing future