/* */

துபாய் சுற்றுலா செல்லும் மாணவ மாணவிகள் : அமைச்சர் கயல்விழி வாழ்த்து

இணையவழி வினாடி வினாவில் தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் கல்வித் துறை ஏற்பாடு.

HIGHLIGHTS

துபாய் சுற்றுலா செல்லும் மாணவ மாணவிகள் : அமைச்சர் கயல்விழி வாழ்த்து
X

தேர்வாகிய மாணவ மாணவிகளுடன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். க.மணிவாசன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையர் சோ.மதுமதி ஆகியோர் உடனிருந்தனர்.

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு நடத்தப்பட்ட இணையவழி வினாடி வினாவில் தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் கல்வித் துறையின் சார்பில் ஐக்கிய அரபு அமீரக நாட்டிலுள்ள துபாய் நகரத்திற்கு சுற்றுலா அழைத்து செல்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் என்ணை கிராமம், திருவள்ளூர் மாவட்டம் வடகரை மற்றும் மதுரை மாவட்டம் சங்கரலிங்காபுரம் ஆகிய ஊர்களில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் பயின்று வரும் 4 மாணவ/மாணவிகள் இதற்கு தேர்வாகியுள்ளனர்.

அவர்களை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் தலைமைச் செயலகத்தில் நேற்று நேரில் அழைத்து வாழ்த்தி பாராட்டினார். இந்நிகழ்வின்போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். க.மணிவாசன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையர் சோ.மதுமதி ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 8 Dec 2021 5:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  3. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  6. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  8. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  9. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  10. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!