கோயில்களில் டெபிட் கார்டுகள் மூலமும் சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்

கோயில்களில் டெபிட் கார்டுகள் மூலமும் சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்
X
கோயில்களில் டெபிட் கார்டுகள் மூலமும் சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 550 திருக்கோயில்களுக்கு 1500 விற்பனை முனையங்களை வழங்கி புதிய வசதியை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

அதில் முதற்கட்டமாக பார்த்தசாரதி திருக்கோயில், திருவேற்காடு கருமாரி அம்மன் திருக்கோவில், வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோவில்களுக்கு பாயிண்ட் ஆப் சேல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, கோயில்களுக்கு முன்பதிவு செய்யும் வசதிக்காக கையடக்க கணினி வழங்கப்படுவதாகவும், பொதுமக்கள் டெபிட் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

Tags

Next Story
why is ai important to the future