தொடர் விடுமுறையையொட்டி முன்பதிவு வசதியுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தொடர் விடுமுறையையொட்டி முன்பதிவு வசதியுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தொடர் விடுமுறையையொட்டி முன்பதிவு வசதியுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்ப)லிட்., கும்பகோணம் சார்பில் சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டியும்,பொதுமக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி,இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம்,வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி,இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு இரண்டு நாட்களும் சேர்த்து 300 கூடுதல் சிறப்பு பேருந்துகளும், திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு இரண்டு நாட்களும் சேர்த்து 175 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். 04.10.2024,05.10.2024 வெள்ளி, சனி ஆகிய இருநாட்களுக்கும் சேர்த்துமொத்தம் 475சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதேபோன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 06.10.2024,07.10.2024,ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நாட்களில் சென்னை தடத்தில் 200சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களிலும் 150சிறப்பு பேருந்துகளும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

05.10.2024, 06.10.2024 ஆகிய நாட்களில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவைக்கேற்ப போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பேருந்து சேவையை அளிக்க ஏதுவாகும் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவுசேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் www.tnstc.inஇணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் ஆப்TNSTC (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும் முன் பதிவு செய்துகொள்ளலாம்.

கூட்ட நெரிசலை தவிர்த்து எவ்வித சிரமமும் இன்றி பயணிக்க “மொபைல் ஆப் TNSTC (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும்” முன் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள்,பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி இப்பேருந்து வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story
Similar Posts
ஹரிஷ் கல்யாண் சம்பளம் இவ்வளவு தானா? இன்னும் 1 கோடியே வரலியே..!
பிரகாஷ்ராஜ், கௌதம்மேனன், பாபிதியோல், பூஜா, ப்ரியாமணி, மமிதா இன்னும் எத்தன பேரு நடிக்கிறாங்க?
வடகிழக்கு பருவமழை: ஈரோடு மாவட்டத்தில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை பயிற்சி
தொடர் விடுமுறையையொட்டி முன்பதிவு வசதியுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
கோவை அருகே கோவில்பாளையத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
ஈரோடு மாவட்டத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளின் வழித்தட விவரங்கள்
கோவை ரயில் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்
கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்த பெண் உள்பட 5.பேர் கைது
புதிய அங்கன்வாடி கட்டிடத்தில் மலிந்த எழுத்துப் பிழைகள்..! குழந்தைகள் கற்றுக்கொள்வதெப்படி..?
பேருந்தில் தவறிய மனநலம் குன்றிய பெண் குணமடைந்து குடும்பத்துடன் சேர்ப்பு
திருச்சி மாநகர் மாவட்ட  காங்கிரஸ் சார்பில் காங்கிரசார் நடைபயண யாத்திரை
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்