/* */

விழித்துக் கொள்ளுமா ரயில்வே துறை?

பயணிகளிடம் பயணசீட்டோ, அடையாள அட்டையோ பரிசோதகர்கள் கேட்காததால் முறைகேடு நடக்க வாய்ப்பு

HIGHLIGHTS

விழித்துக் கொள்ளுமா ரயில்வே துறை?
X

ரயில் மாதிரி படம் 

முன்பெல்லாம் ரயில் பயணத்தில் பரிசோதகர் டிக்கெட்டை சரிபார்த்து, அடையாள அட்டையையும் சரிபார்ப்பது வழக்கம். ஆனால் தற்போதைய கொரோனா காலகட்டத்தில் அனைத்தும் மாறிவிட்டது.

முன்பதிவு செய்த பயணிகளிடம் பரிசோதகர் இருக்கை எண்ணை மட்டுமே கேட்கிறார். பயணசீட்டோ அல்லது பெயரையோ கேட்பதில்லை. அவர்தான் அந்த பயணி என்றும் சோதனையிடுவதில்லை என்ற குற்றசாட்டு எழும்பியுள்ளது. . இவ்வாறு இருந்தால், யார் வேண்டுமானாலும் எந்த டிக்கெட்டிலும் பயணிக்கலாமே?

கொரோனா காலத்தில், ரயில்வே பரிசோதகர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் தான். ஆனால் அதற்காக பயணியின் பெயரையோ அல்லது பயணசீட்டையோ கேட்காமல் இருப்பது டிராவல் ஏஜண்டுகள் டிக்கட்டுகளை மொத்தமாக வெவ்வேறு பெயர்களில் முன்பதிவு செய்து போலி நபர்கள் பயணிக்க வசதியாக இருக்கும் என்பதே நிதர்சனம்.

பரிசோதகர்கள் பயணசீட்டை கையில் வாங்க வேண்டாம். அடையாளஅட்டையை தொடக்கூட வேண்டாம். குறைந்தபட்சம் அவர்களது பயணசீட்டையோ அல்லது அடையாள அட்டையையோ கேட்டால் முறைகேடு நடக்க வழியிருக்காது.

இதுபோன்று அனைத்து தடங்களிலும் பரிசோதகர்கள் இருக்கை எண்ணை மட்டுமே கேட்பதாக தெரியவருகிறது.

விழித்துக்கொள்ளுமா ரயில்வே நிர்வாகம்?

Updated On: 22 Jun 2021 3:32 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை