/* */

ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி... ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு

மதுரை கோட்டத்தில், 23 எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் முன்பதிவு இல்லாதவையாக மாற்றம்.

HIGHLIGHTS

ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி...  ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு
X

மதுரை கோட்டத்தில் 23 எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக மாற்றப்பட்டு இருந்தது. கொரோனா தொற்றுக்கு பிறகு கூட்டம் கூடுவதை தவிர்க்க ரயில்களில் ரயில் பெட்டிகள் அனைத்தும் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிகளாக மாற்றி இயக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது சாதாரண இரண்டாம் வகுப்பு பயணசீட்டு பயன்படுத்தி, பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக, ரயிலில் இருக்கை வசதி பெட்டிகளை முன்பதிவு இல்லாத பெட்டிகளாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்தகைய ரயில்களின் விவரம்

ராமேஸ்வரம் -கோயம்புத்தூர் (16 617 )

மதுரை- புனலூர் (16729 )

புனலூர்- மதுரை (16730 )

திருநெல்வேலி -பாலக்காடு ரயில் - பாலறுவி (16791)

மதுரை- எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்(20 602)

தஞ்சாவூர் மெயின் லைன் வழி- மதுரை- சென்னை எழும்பூர் (22624 )

ஆகிய விரைவு ரயில்களில், மார்ச் 16 முதல் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.

தூத்துக்குடி- மைசூர் (16235)

ராமேஸ்வரம் -செகந்திராபாத்( 07686)

மதுரை -கசக்குடா (17616) ஆகிய விரைவு ரயில்களில் மார்ச் 20 முதலும்,

தூத்துக்குடி- சென்னை முத்துநகர் (12694) ரயில் ஏப்ரல் 1 முதல்,

திருநெல்வேலி -சென்னை- நெல்லை ரயில்(12632)

மதுரை -சென்னை- பாண்டியன் ரயில்( 12 638 )

செங்கோட்டை- சென்னை- பொதிகை ரயில் (12662 )

ராமேஸ்வரம்- சென்னை போட் மெயில் (16 852)

ராமேஸ்வரம்- சென்னை -சேதுறையில்( 22 662 ) ஆகியவற்றில் ஏப்ரல் 16 முதல்,

ராமேஸ்வரம் -திருப்பதி ரயில் (16780) ஏப்ரல் 20 முதலும் ,

திருச்செந்தூர்- சென்னை செந்தூர் ரயில் (16106 )

செங்கோட்டை- சென்னை சிலம்பு ரயில்யில் (16182)

மதுரை -திருவனந்தபுரம் அமிர்தா இரயில் (16344 )

காரைக்குடி- சென்னை -பல்லவன் ரயில் (12606)

மதுரை- சென்னை வைகை ரயில்(12636)

புனலூர் -குருவாயூர் ரயில் (16327)

ராமேஸ்வரம் -திருச்சி ரயில்( 16850 )

ஆகிய விரைவு ரயில்களில் மே 1 முதல் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகள் ஆக மாற்றப்படுகிறது.

இந்த தேதிக்கு பிறகு இருக்கை வசதி முன்பதிவு செய்த பயணிகள் ரயில் கட்டண தொகை முழுமையாக திருப்பி தரப்படும். இது சம்பந்தமாக அவர்கள் கொடுத்துள்ள அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என மதுரை இரயிவே கோட்டம் அறிவித்துள்ளது.

Updated On: 8 March 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...