Begin typing your search above and press return to search.
திருப்பத்தூரில் சித்த மருத்துவ பிரிவு மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருப்பத்தூர் சித்த மருத்துவ பிரிவில் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு உள்ளான நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சித்த மருத்துவப் பிரிவை மாவட்ட ஆட்சியாளர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டார். இது சம்பந்தமாக அவர் கூறியதாவது அலோபதி மருத்துவ முறையிலும் ,சித்த மருத்துவ முறையிலும் நோயாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப சிகிச்சைவழங்கப்படும் என்றும்,
இங்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறையை பாதிப்படைந்த நோய்தொற்றாலர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், மேலும் வேகமாக பரவி வரும் நோய் தொற்றிலிருந்து மக்கள் தங்களைத் தாங்களே முழுமையாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் , லேசான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வந்து சிகிச்சை மையத்தை பொதுமக்கள் அணுகவேண்டும் கேட்டுக்கொண்டார்