16 வயது சிறுமியை, சீரழித்த 3 பேர், தாயே உடந்தையாக இருந்த கொடூரம்

16 வயது சிறுமியை, சீரழித்த 3 பேர், தாயே உடந்தையாக இருந்த கொடூரம்

பைல் படம்

16 வயது சிறுமியை முதியவர் உட்பட 3 பேர் சீரழித்தனர், இதற்கு தாயே உடந்தையாக இருந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் பகுதியை சேர்ந்த 45 வயது பெண், வறுமை காரணமாக தனது 16 வயது மகளை உறவினர் வீட்டில் தங்கியிருந்து, வீட்டு வேலை பார்க்க அனுப்பினார்.

வீட் டின் உரிமையாளர் அக்பர் அலி (66), சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதோடு மட்டும் இல்லாமல் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது குறித்து சிறுமி தன் தாயிடம் எத்தனையோ முறை எடுத்து கூறியும் , தாய் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து சிறுமி அங்கு இருக்க மறுத்ததால், அவரை அழைத்துக் கொண்டு தாய் திருச்சிக்கு சென்று விட்டார்.

அங்கு ஜெயங்கொண்டத்தை சேர்ந்த சரவணன் (30), பட் டுக்கோட்டையை சேர்ந்த முருகேசன் (40) ஆகியோரிடம் சிறுமியை தவறான உறவுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

பின்னர் மீண்டும் சிறுமியை, திருப்புத்தூரில் உள்ள அக் பர் அலி வீட்டில் தாயார் வற்புறுத்தி தங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கொடூரம் குறித்து உறவினர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை விசாரித்த திருப்புத்தூர் நகர் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, எஸ்ஐ சவுதம்மா ஆகியோர், அக்பர் அலி, சரவணன், முருகேசன், சிறுமியின் தாயார் ஆகிய 4 பேர் மீதும் போக்சோ சட் டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் அக்பர் அலி, சிறுமியின் தாயாரை கைது செய்த போலீசார், தலைமறைவான சரவணன், முருகேசனை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி மதகுபட்டி குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Tags

Next Story