/* */

தூய்மை இந்தியா திட்டம்: சிவகங்கை நகர வீதிகளை சுத்தம் செய்த கலெக்டர்

தூய்மை இந்தியா திட்டம்: சிவகங்கை நகர வீதிகளை சுத்தம் செய்த கலெக்டர்
X

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்,  சிவகங்கை நகர வீதிகளை சுத்தம் செய்யும் பணியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி. 

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிவகங்கையில் இன்று வீதிகளை சுத்தம் செய்யும் பணிகளை, அரண்மனை வாசலில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி தொடங்கி வைத்தார். அதன்படி, சிவகங்கை நகராட்சி மற்றும் நேரு யுகேந்திரா இணைந்து, சிவகங்கையில் முக்கிய வீதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு வலியுறுத்தி குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், சிவகங்கை தாசில்தார் தர்மலிங்கம், நகராட்சி சுகாதார ஆய்வாளர் தங்கபாண்டி, சுகாதார அலுவலர் விஜயகுமார், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் கிருபா தினகரன், தூய்மை பணி மேலாளர் ராஜேந்திரன் மற்றும் கணேசன், துப்புரவு பணியாளர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் சிவகங்கை நகர வீதிகளில் சென்று கீழே கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியும், வீதி வீதியாகச் சென்று குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

Updated On: 7 Oct 2021 9:07 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...