Begin typing your search above and press return to search.
சிவகங்கை:காந்தி உருவச்சிலைக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
காந்தி நினைவு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மரக்கன்று வழங்கினார்
HIGHLIGHTS
மகாத்மா காந்தியின் 153வது நாளை முன்னிட்டு சிவகங்கையில்,காந்தியின் சிலைக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
நாடு முழுவதும் அண்ணல் மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக சிவகங்கை அரண்மனை வாசல் எதிரே உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் .பின்பு காந்தி நினைவு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் மரக்கன்றுகளை வழங்கினார்.