/* */

காசி விஸ்வநாதர் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்

காசி விஸ்வநாதர் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்
X

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருத்தேர் விழா நடைபெற்றது.

சிவகங்கை நகர மையப்பகுதியில் அமைந்துள்ளது புராண சிறப்பு மிக்க பழைமையான விசாலாட்சி அம்மன் சமேத ஸ்ரீ காசி விசுவநாத சுவாமி திருக்கோவிலில் முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திரப் பெருவிழா திருத்தேரோட்ட விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இத்திருக்கோவிலில் தனி சன்னதியில் முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமியாக வள்ளி-தெய்வானையுடன் அருள்பாலித்து வருகிறார். பங்குனி மாதத்தில் முருகப்பெருமானுக்கு 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

இந்த ஆண்டு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை தேவியர்களுடன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் அரோகரா அரோகரா கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்து சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்ரமணிய சுவாமிக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

Updated On: 28 March 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...