/* */

முன்விரோதம் காரணமாக அறுவடை இயந்திரத்தைத் தடுத்து நிறுத்திய கிராமத்தினர்

பனிக்கனேந்தல் கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தடுத்துள்ளனர்

HIGHLIGHTS

முன்விரோதம் காரணமாக அறுவடை இயந்திரத்தைத் தடுத்து நிறுத்திய கிராமத்தினர்
X

 பனிக்கனேந்தல் கிராமத்தில் அறுவடைக்கு வந்த இயந்திரத்தை அக்கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

முன்விரோதம் காரணமாக அறுவடை செய்ய வந்த அறுவடை இயந்திரத்தை கிராமத்தினப் தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பனிக்கனேந்தல் கிராமத்தில் அறுவடைக்கு வந்த இயந்திரத்தை அக்கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பனிக்கனேந்தல் கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது இரு தரப்பினருக்கு முன்விரோதம் ஏற்பட்டது. இன்று ஒரு தரப்பினர் தங்கள் பகுதியில் விளைந்துள்ள நெற்பயிரை அறுவடை செய்வதற்காக அறுவடை இயந்திரத்தை வரவழைத்துள்ளனர். இதை அறிந்த மற்றொரு தரப்பினர் அவர்களது பகுதியில் முள் செடிகளை போட்டு தடுப்புகளை ஏற்படுத்தினர்.

இதனால் அறுவடை இயந்திரம் வயலுக்கு செல்ல முடியாமல் பாதி வழியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியது. இதுகுறித்து தகவலறிந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடம் வந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில், இரு தரப்பினரும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதனையடுத்து நாளை மறுநாள் மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் சமரச கூட்டம் நடத்தப்படும் என்றும் அதன் பிறகு அறுவடை செய்யலாம் என முடிவு எடுக்கப்பட்டு அறுவடை இயந்திரம் திருப்பி அனுப்பப்பட்டது. அறுவடைக்கு தயாரான நெல் பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கண்ணீர் வடித்தது அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது.

Updated On: 5 Feb 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!